NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** கள்ளச்சாராயம் விவகாரம் தேமுதிக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராயம் விவகாரம் தேமுதிக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

 கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து தேமுதிகவினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்



தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் என்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கூறியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சி  மாவட்ட தேமுதிக  சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் சந்தோஷ் குமார் கண்டன உரையாற்றினார்.



மாணவர் மாவட்ட செயலாளர் கணேஷ் வடக்கு மாவட்ட செயலாளர் குமார் தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிக கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஐயப்பன் , மாநில தொழிற்சங்க பேரவை திருப்பதி, அவைத்தலைவர், ஜெயராமன், அர்ஜுனன்,  முருகேசன், ப்ரீத்தா விஜய் ஆனந்த்,  மில்டன் குமார்,  குமாரவேல் , காளியப்பன், ராஜ்குமார், ஐயப்பன், லோகராஜ்,  வெங்கடேசன், மணிகண்டன், பிரியா சாந்தி மற்றும் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments