// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

 இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் நடை பெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.


இதன்பின் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் நந்தகுமார் தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் கணேசன், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள்   மற்றும்  பலர்   கலந்துகொண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பித்தனர்.


கரூர் நிருபர் குமரவேல் 

Post a Comment

0 Comments