சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவிய கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவியக் கண்காட்சி திருச்சி தனியார் ஹோட்டல் குளிர் அரங்கில் மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் தலைப்பில் நடக்கும் 3 நாட்கள் ஓவிய கண்காட்சியில் 33 இளம் ஓவியர்கள் பங்கேற்பில் 133 ஓவியங்கள் இடம்பெற்றன.ஒவிய கண்காட்சிக்கு டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார். முதல்வர் நஸ்ரத் பேகம் துவக்க உரையாற்றினார். முதன்மை விருந்தினர் மேனாள் நீதி அரசர் கே. சந்துரு கண்காட்சியினை திறந்து வைத்து பேசுகையில்..
சட்டத்தை மதிக்கும் மாண்பை உருவாக்க வேண்டும் ஒவ்வொருவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்.
அந்த வகையில் பாரம்பரிய ஓவியக் கலையில் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் கண்காட்சியில் பங்கேற்ற இளம் ஓவியர்களை பாராட்டுகிறேன் என்றார்.
0 Comments