இந்திய திரு நாட்டின் 78 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் மாநில பொது செயலாளர் இடி முரசு இஸ்மாயில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துது அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளார். அதில் கூறுகையில்...
ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறை எதிர்த்து அடிமை விலங்கை ஒடித்து பெற்ற சுதந்திரம் பல்லாயிரம் உயிர்களை பலி கொடுத்து பெற்ற சுதந்திரம்..
அண்ணல் மகாத்மா காந்தி, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், ஜவஹர்லால் நேரு ,அபுல் கலாம் ஆசாத் போன்ற பெரும் தலைவர்கள் பெற்று தந்த சுதந்திர இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை பாதுகாத்திட இஸ்லாமிய மக்களின் உறுதி செய்திட பாடுபடும்
இந்தியா கூட்டணி தலைவர்களின் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அணி திரளுவோம் சுதந்திரத்தை பாதுகாப்போம் என்ற சூளுரை மேற்கொள்வோம் என தெரிவித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் மாநில பொதுச்செயலாளர் இடி முரசு இஸ்மாயில் தெரிவித்து கொண்டார்
0 Comments