NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் 3 வது நாளாக பணிப்புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் 3 வது நாளாக பணிப்புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

 காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் 3 வது நாளாக பணிப்புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 


தமிழகத்தில் வருவாய்த்துறையில் இளநிலை, முதுநிலை வருவாய்த்துறை ஆய்வாளர் (ஆர்ஐ) பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைத்துள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அதீதபணி நெருக்கடி அளிப்பதை தவிர்ப்பதோடு, சிறப்பு பணிகள் மற்றும் சான்றிதழ் பணிகளுக்கு வட்டாரம் தோறும் கூடுதல் துணை வட்டாட்சியர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும், பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும், 2 ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியல் மற்றும் நடப்பாண்டுக்கான கோட்டாட்சியர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 3 வது நாளாக  பணிப்புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


இந்த போராட்டம் திருச்சி மாவட்ட மையம் சார்பில், போராட்ட பிரச்சார இயக்கம் மற்றும் வாயில் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்றது. 



மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு மற்றும் பணி புறக்கணிப்பு போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பொன் மாடசாமி தலைமை வகித்தார் .



மாவட்ட துணைத் தலைவர் சங்கரநாராயணன் மாவட்ட பொருளாளர் ராமலட்சுமி மாவட்ட இணை செயலாளர்கள் சண்முகவேலன், ராஜவேல் மற்றும் மூத்த உறுப்பினர்கள்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Post a Comment

0 Comments