// NEWS UPDATE *** "விஜய் வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள். ஓட்டு போடும் நாளில் ஒவ்வொரு வீட்டிலிருக்கும் விஜய்யும் வெளியே வந்து ஓட்டு போடுவார்கள். அன்றைக்கு தெரியும்.. விஜய்யை ஏன் வெளியே அழைத்தோம் என்று" -தவெக ஆண்டுவிழாவில் விஜய் *** எம்ஜிஆர் சிலைக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

எம்ஜிஆர் சிலைக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் திருச்சி மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.ஜெயக்குமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி தலைமையில் சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ  சிலைக்கு   சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அன்னதானம் வழங்கினர்,



இந்த நிகழ்வில், கழக இளைஞரணி இணைச்செயலாளர் பொன். செல்வராஜ், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், 


மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும் , ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்தி , மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் எல்.ஜெ. நவநீத கிருஷ்ணன், மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments