// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருச்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மீனவரணி மாவட்ட செயலாளர் கோ.கு. அம்பிகாபதி ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம்

திருச்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மீனவரணி மாவட்ட செயலாளர் கோ.கு. அம்பிகாபதி ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம்

திருச்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மீனவரணி மாவட்ட செயலாளர் கோ.கு. அம்பிகாபதி ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.


மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை திருச்சி மாநகர் மாவட்ட மீனவர் அணி செயலாளரும், மாமன்ற குழு தலைவருமான கோ.கு. அம்பிகாபதி ஏற்பாட்டில் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் அமைந்துள்ள லூப்ரா பார்வையற்றோர் இல்லத்தில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும். முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் வழங்கப்பட்டது. 


மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் நீர் மோரும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, மலைக்கோட்டை அன்பழகன் , சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் தென்னூர் அப்பாஸ்,இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த் , தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு , 

ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர் மற்றும் பகுதி செயலாளர்கள் ,நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,  வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தொண்டர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments