திருச்சி தி ஐ ஃபவுண்டேசன் சார்பில் விழிப்புணர்வு பேரணி... உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருச்சி "தி ஐ ஃபவுண்டேஷன்" கண் மருத்துவமனை சார்பாக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணி மருத்துவர் டாக்டர். அர்ச்சனா தெரசா தலைமையில், திருச்சி போக்குவரத்துக் காவல் உதவி ஆணையர் முஹம்மது ரஃபி வாழ்த்துரை வழங்கி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மருத்துவமனை மேலாளர் ஜெகதீஸ்வரி வரவேற்று பேசினார்.மருத்துவர்கள் டாக்டர் கிருஷ்ணன் ,டாக்டர் ரிப்க்கி காமில், K.ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள், புனித அன்னாள் செவிலியர் கல்லூரி மாணவிகள், மருத்துவமனையின் அனைத்து ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களும் ஊழியர்களும், தங்கள் கரங்களில் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனர்...
0 Comments