NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-

காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-

 திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில்  காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்விற்கு முன்னாள் திருச்சி பாராளுமன்ற  உறுப்பினரும்,  முன்னாள் மத்திய மாநில  அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். 


அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் இருந்து காந்தி சிலை வரை மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.  

இந்த நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் வேலுச்சாமி, பெனட் அந்தோணி ராஜ் மாநில பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன் மலைக்கோட்டை கோட்டத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோட்டத் தலைவர் பிரியங்கா படேல் அணித்தலைவர்கள் பஜார் மொய்தீன், ஷீலா  மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments