நாட்டில் பறவை இனங்கள் தற்போது அழிந்துகொண்டு வருகிறது. பறவைகள் சாப்பிட்டு இடும் எச்சங்களின் வாயிலாக பல நூறு மரங்களின் விதைகள், தாவரங்கள் , கொடிகள் வளர்ந்து அடர்ந்தக் காடுகள் உருவாகிறது. இந்த உணவுச் சங்கிலி அறுபடாமல் தடுக்க பறவையினங்களை நாம் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பறவை இனங்கள் சிறுக சிறுக அழிந்துவிடும்.
ஆறு, குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளில் கோடையில் தண்ணீர் வற்றி வருவதுடன், அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளாகக் கட்டி பறவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்து விடுகிறோம். இதை கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக இந்த ஆண்டும் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பாக மண் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வீட்டு மொட்டை மாடி, ஜன்னல் பகுதி, வாசல் பகுதி, தோட்டம், நீர்நிலைகள் மற்றும் மரங்கள் அருகில் உள்ள வீடுகளில் வழங்கப்பட்டது.
தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், துணை செயலாளர் ஆர்.கே.ராஜா, மெக்கானிக் மணி, என்.வெங்கடேஷ், தேவி கிருஷ்ண மூர்த்தி, மலைக்கோட்டை தாமு, சுமன், சுதன்,மற்றும் கலந்துக் கொண்டார்கள்.
0 Comments