NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** IUML தலைவரான காதர் மொகைதீன் அவர்களை மஜகவினர் சந்தித்து வாழ்த்து..!

IUML தலைவரான காதர் மொகைதீன் அவர்களை மஜகவினர் சந்தித்து வாழ்த்து..!

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக தேர்வு பெற்று இருக்கும் பேராசிரியர்  காதர் மொய்தீன் அவர்களை திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் சந்தித்து வாழ்த்து கூறினர்.

மஜக இளைஞர் அணியின் மாநில செயலாளர் திருச்சி ஷெரிப்  அவர்களும், மாவட்ட செயலாளர் பாபு பாய் அவர்களும் அவருக்கு சால்வை அணிவித்தும், மலர் கொத்தினை கொடுத்தும் சிறப்பு செய்தனர்.அப்போது மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் வாழ்த்துக்களையும் கூறி, விரைவில் அவரும் உங்களை சந்திப்பதாக உள்ளார் என்றும் கூறினார்.


அப்போது தலைவர் பற்றி கூறிய பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் "அரசியல் களத்தில் இடைநிற்காது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அன்சாரி போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள்" என வாழ்த்தினார்.


இந்த சந்திப்பின் போது மாநில இளைஞர் அணி பொருளாளர் பெரம்பலூர் இம்ரான், மாவட்டத் துணைச் செயலாளர் தர்வேஷ், இளைஞர் அணி செயலாளர் யாசர் ஷெரிப், MJVS மாவட்டச் செயலாளர் ஃபரீத், மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் ரபீக் ஆகியோர் உடன் இருந்தனர்.


Post a Comment

0 Comments