// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி மலைக்கோட்டை பகுதியை வியாபார மண்டலமாக அறிவிக்க வேண்டும் வியாபாரிகள் மனு

திருச்சி மலைக்கோட்டை பகுதியை வியாபார மண்டலமாக அறிவிக்க வேண்டும் வியாபாரிகள் மனு

திருச்சி NSB ரோடு,தெப்பக்குளம் ஆர்ச் உள்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்து வருபவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த கூடாது மாற்று இடம் வழங்கினால் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய இடத்தில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனிதநேய அனைத்து வர்த்தக நலச் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

திருச்சி என்எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம் மற்றும் நந்தி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தரைக்கடை அமைத்து தங்களது வாழ்வாதாரத்தை சற்று காத்து வரும் தரைக்கடை வியாபாரிகளை பெரிய முதலாளிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் நிர்பந்தத்தால் அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் அமர்த்த மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.


பொதுமக்கள் வந்து செல்லும் பகுதிகளில் தரைக்கடைவியாபாரிகளுக்கு என இடம்ஒதுக்கி அவர்கள் வியாபாரம் செய்யவும், தரைக்கடை வியாபாரிகளை அகற்றுவது தொடர்பாகவும் அதேநேரம் சரக்கடி வியாபாரிகளுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடம் குறித்தும் தற்போது தரைக்கடை வியாபாரிகளை ஆலோசிக்காமல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் தன்னிச்சையாகமுடிவெடுத்து தரைக்கடை வியாபாரிகளை வஞ்சிக்கும் நோக்கில் செயல்படுகிறது.



ஆளுங்கட்சி மற்றும் பெரிய முதலாளிகள், வெண்டிங் கமிட்டியினர் நிர்பந்தத்திற்கு இணங்க செயல்படாமல், தரைக்கடை வியாபாரிகளுக்கு உரிய மாற்று இடம் வழங்கிடவலியுறுத்தி மனிதநேய அனைத்து வர்த்தகர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கபீர் அகமது தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான தரைக்கடை வியாபாரிகள் மனு அளித்தனர்.



Post a Comment

0 Comments