திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் புத்தக அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது..
நூலாசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நாணயங்கள் பணத்தாள்கள் மூத்த சேகரிப்பாளர் அசோக் காந்தி தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூலினை அறிமுக படுத்த, ஹீராலால் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன், முகமது சுபேர், மதன், சென்னை பூபதி, சேலம் பூபதி, பொள்ளாச்சி மணிகண்ட பிரபு, முகமது பைசல், துறையூர் பெரியசாமி, தஞ்சை முகமது மீரான், முகமது யூசுப், தாமோதரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

0 Comments