இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுக்க தேசிய கொடி ஏற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
திருச்சியில் மஜக சார்பில் அரசு மருத்துவமனையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் பாபு தலைமையில், மாநில இளைஞர் அணிச் செயலாளர் திருச்சி ஷரிப் அவர்கள் முன்னிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சூடான வெஜி டெபிள் பிரியாணி மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
மேலும் மஜக சார்பில் தமிழ்நாடு முழுக்க தேசியக் கொடியேற்றல் நிகழ்ச்சியுடன், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவிடுதல், அரசு மருத்துவமனைகளில் பழங்கள், பிஸ்கட்டுகள் வழங்குதல், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் மாவட்ட பொருளாளர் ஜமீர் பாஷா, மாவட்டத் துணைச் செயலாளர் யாசர் ஷெரிப், அப்துல் அஜீஸ், வர்த்தக அணி மாநகர செயலாளர் பகதூர் அலி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சதாம், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் சேட், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் பஷாரத், பொருளாளர் நியாஸ், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ஷேக் உசேன், ஆழ்வார்தோப்பு கிளைச் செயலாளர் அன்சாரி, ஹபிபுதின் ஷரிப் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 




0 Comments