தமிழ்நாடு அனைத்து மொபைல் சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் எழுச்சி மாநாடு திருச்சி பஞ்சப்பூர் பகுதிகள் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து மொபைல் விற்பனையாளர்கள் மற்றும் பழுது நீக்கும் கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 50 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்ட மொபைல் கடை உரிமையாளர்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மொபைல் போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் துறையில் தற்போதுள்ள அதிநவீன செயல்பாடுகள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர் கூறும் போது..... இந்தியாவிலேயே முதல்முறையாக மொபைல் விற்பனையாளர்களின் எழுச்சி மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் கலந்து கொண்டார்கள்.




0 Comments