தியகராஜ பாகவதர் 116வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.
இதைத் தொடர்ந்து அனைத்து விஸ்வகர்மா மக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் தியாகி முத்துசாமி பேரவை நிறுவனர் ஜிகேஆர். ராஜா மற்றும் தமிழக மண்ணுரிமை கட்சி சார்பாகவும் மரியாதை செலுத்தப்பட்டது.உடன் Er. M.S.ராகவன் (@)பார்த்திபன்,சந்திரன் ஆகியோர் உள்ளனர். இதில் விஸ்வகர்மா மக்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



0 Comments