கடந்த இரண்டு மாத காலமாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொசுக்களின் எண்ணிக்கை பெருகி மக்கள் மாபெரும் துன்பத்திற்கு உள்ளாகி உள்ளனர்
கொசுக்கடியின் காரணமாக கொடிய காய்ச்சலும் தற்போது பரவ ஆரம்பித்துள்ளது.
கொசுக்கடிகால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் உடனடியாக கொசு அழிப்பு பணிகளை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் துவங்காவிட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் தாண்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தெரிவித்துள்ளார்.



0 Comments