தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார்
மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட 29 வது வார்டு உட்பட்ட ஆழ்வார் தோப்பு பகுதியில் மேற்குத் தொகுதி வேட்பாளர் கே.என் நேரு வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
இதில் எஸ்டிபிஐ கட்சியினர் dr பக்ருதீன், மேற்குத் தொகுதி தலைவர் முஸ்தபா, துணைத் தலைவர் நபீஸ் , உட்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்




0 Comments