திருச்சி மற்றும் மதுரையை தலைமை இடமாகக் கொண்டு அகாடமி வருகிறது சக்தி நீட் அகாடமி. இங்கு நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குனர் அருணாச்சலம் அரசு பள்ளிகளில் பயின்று இந்த ஆண்டு நீட் தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பினை தவறவிட்ட மாணவர்களுக்கு ஓராண்டு இலவச பயிற்சி அளிக்க முன்வந்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் இன்று நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார் ...எம்பிபிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி வருகிறது.இதில் தற்போது 510 சீட்டு வரை ஒதுக்கீடு கிடைக்கிறது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது இணை இயக்குனர் ஆதித்யா அருணாச்சலம் உடன் இருந்தார்



0 Comments