// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி மாநகர காவல்துறைக்கு புதிய 14 ரோந்து வாகனம்

திருச்சி மாநகர காவல்துறைக்கு புதிய 14 ரோந்து வாகனம்

 திருச்சி மாநகர காவல்துறையினருக்கு 14 புதிய ரோந்து வாகனங்கள் சென்னையிலிருந்து திருச்சி கொண்டு வரப்பட்டன.. 




இந்த ரோந்து வாகனங்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார் ..இந்த வாகனங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு ரோந்து வாகனம் வீதம் 14 சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு வழங்கியும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளவும். பொது மக்கள் அவசர அழைப்புக்கு  உடனே தணிக்கை செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்கு திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அறிவுரைகள் வழங்கினார் 

Post a Comment

0 Comments