// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** 22 வது வார்டு வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.என் நேரு தீவிர பிரச்சாரம்

22 வது வார்டு வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.என் நேரு தீவிர பிரச்சாரம்

 திருச்சி 22வது வார்டு வேட்பாளரை ஆதரித்து  அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்




தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 22வது வார்டில் திமுக சார்பில் விஜயலட்சுமி கண்ணன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்து தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி தில்லைநகர் பகுதியில் 22 வது வட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு வேட்பாளர் விஜயலட்சுமி கண்ணனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments