நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் முடிய இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
திருச்சி மாநகராட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து தனது 12 வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று பாலமுருகன் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் தனது வாக்குறுதிகளை நோட்டீஸ் அச்சடித்து வீடுகள் தோறும் விநியோகம் செய்து தென்னைமரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார். இவரது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் நேற்று 12 வது வார்டுக்குட்பட்ட பாலாஜி அவன்யூ, குடமுருட்டி ரோடு, பழைய கரூர் சாலை
உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து தென்னை மரம் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டி தீவிர பிரச்சாரம் செய்தார். வாக்கு சேகரிப்பின் போது அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு டீ ஆற்றி கொடுத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதுபோல சாலையோர இஸ்திரி கடையில் துணிகளை இஸ்திரி போட்டு வேட்பாளர் பாலமுருகன் வாக்கு சேகரித்தார். இது வார்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்தகைய நூதன பிரச்சாரம் காரணமாக கடும் போட்டிகளை தாண்டி சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன் எளிதில் வெற்றி பெறுவார் என பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் வேட்பாளர் பாலமுருகனுக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீவிரமாக பணியாற்றி வருவது பாலமுருகனுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
0 Comments