// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தென்னை மரம் சின்னத்தில் வாக்கு கேட்டு சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

தென்னை மரம் சின்னத்தில் வாக்கு கேட்டு சுயேட்சை வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

 நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் பாலமுருகன் ஈடுபட்டு வருகிறார். வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். 



மேலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மாநகராட்சியில் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று 12 வது வார்டுக்குட்பட்ட  பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று நோட்டீஸ் வழங்கி தென்னை மரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்


ஏற்கனவே பாலமுருகன் இந்த பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். இதனால் பாலமுருகனுக்கு வாக்களிக்க வார்டு மக்கள் முடிவு செய்துள்ளனர். ஆகையால் பாலமுருகனின் வெற்றி உறுதியாகி விட்ட ஒன்று என்று அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒருவர் தெரிவித்தார். வாக்கு சேகரிப்பின் போது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments