// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ரம்ஜான் நோன்பு...! பள்ளிவாசல்களுக்கு 6000 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவு

ரம்ஜான் நோன்பு...! பள்ளிவாசல்களுக்கு 6000 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவு

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நெருங்கிவிட்டது.இதனால் இன்னும் சில நாட்களில் ஒவ்வொருவரும் நோன்பு கடைபிடிக்க தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கு தற்போது இதமான அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு கூறியுள்ளது.

அதன்படி 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களில் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ரூபாய் 13.50 கோடி கூடுதல் செலவினம் மூலம் பள்ளிவாசல்களுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியது. இதனால் இஸ்லாமியர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments