BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி மாநகராட்சி மேயரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மனிதநேய மக்கள் கட்சியினர்

திருச்சி மாநகராட்சி மேயரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மனிதநேய மக்கள் கட்சியினர்


திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகனை, மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்




நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மார்ச் 2-ஆம் தேதி திருச்சி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஆணையர் முஜிபூர் ரகுமான் முன்னிலையில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் இன்று (04.03.2022) திருச்சி மாநகராட்சியில் நடைபெற்றது. 





இதில் திமுக சார்பில் 27 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.அன்பழகன் திருச்சி மாநகராட்சி மேயராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் மேயர் மு. அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மனித நேய மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் MA. முகமது ராஜா தலைமையில் மாவட்ட செயலாளர் A. இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் A. அஷ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் A.அசாருதீன், SF. இம்ரான், S.சம்சுதீன் ஆகியோர் மேயர் மு.அன்பழகனை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர். 

Post a Comment

0 Comments