NEWS UPDATE *** ஜூன்.8ம் தேதி மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை! *** உலக ஆட்டிஸம் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ஆட்டிஸம் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 உலக ஆட்டிஸம் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் பகுதியில் நடைபெற்றது....  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பகல் நேர பாதுகாப்பு மைய பணியாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...


இந்த நிகழ்ச்சியில் 25 குழந்தைகள் 
அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்....

வட்டார கல்வி அலுவலர் அவர்கள் ஆட்டிசம் குழந்தைகள் பற்றி தங்கள் அனுபவத்தை பற்றி  சிறப்புரையாற்றினார்கள்...வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு பற்றி விளக்கினார்கள் பயிற்சி வட்டார கல்வி அலுவலர் அவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்...
சிறப்பாசிரியர்கள் ஆட்டிசம் குழந்தைகள் பற்றியும் அவர்களுக்கு அரசாங்கத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.... இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்... இந்த நிகழ்வில் அந்தநல்லூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மருத நாயகம் அவர்கள் தலைமையிலும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மீனா அவர்கள் முசிறி வட்டார கல்வி அலுவலர்  மீனாட்சி அவர்கள் முன்னிலை வகித்தனர்....

Post a Comment

0 Comments