// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை  கண்டித்து ஈரோட்டில்  காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு  விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது...இதை கண்டித்து ஈரோடு  காங்கிரஸ் கமிட்டி  சார்பில் வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் மாட்டு வண்டியில் பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....


இந்த ஆர்ப்பாட்டத்தில்  தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான  இ. திருமகன் ஈவேரா அவர்கள் தலைமை வகித்தனர்.. அவருடன் ஈரோடு மாநகர மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் ஜெ. சுரேஷ் அவர்களும் ஈரோடு மகளிர் அணி பேபி M மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்...

ஈரோடு நிருபர் பேபி மற்றும் யுவராஜ் 



Post a Comment

0 Comments