BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை

அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை

 திருவாரூர் அருகே அண்ணனை கொலைசெய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

திருவாரூர் அருகே அண்ணனை கொலைசெய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலம் காவல் சரகம் ஏத்தகுடி, ‌ கீழ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வீரையன் மகன் விஜயகுமார் (வயது-46). இவரது அண்ணன் ராஜ்குமார்.

கடந்த 28-11-2018 அன்று விஜயகுமார் தனது அண்ணன் ராஜ்குமாரை குடும்ப பிரச்சனை காரணமாக கொலை செய்தது தொடர்பாக தலையாமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பில் தனது அண்ணனை கொலை செய்த தம்பி விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இதனையடுத்து தலையாமங்கலம் போலீசார் விஜயகுமாரை சிறையில் அடைத்தனர். இந்தக் கொலை வழக்கு சம்பவத்தில் புலன் விசாரணை செய்து சிறப்பாக பணியாற்றிய மன்னார்குடி வட்ட காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் மற்றும் தலையாமங்கலம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. விஜயகுமார் பாராட்டினார்.

Post a Comment

0 Comments