BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** அம்பேத்கர் பிறந்தநாள் விழா...! மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது

அம்பேத்கர் பிறந்தநாள் விழா...! மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது

அம்பேத்கர் பிறந்த நாள் விழா  ஏழை எளிய மக்களுக்கு அரிசி  மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. சட்டமேதை அம்பேத்கரின் 131ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வருகின்றனர்.



அம்பேத்கர் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைமை சபை கிறிஸ்து பிரன்ஹாம் எட்டாவது  சபையின் தொண்டு நிறுவன தலைவர் ஆப்ரகாம்  போதகர் செயலாளர் விஜய் ஈசாக் இவர்கள் தலைமையில்  300 ஏழை பெண்களுக்கு சேலை,அரிசி மற்றும் 200  மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.... இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கனியமுதன், ஆல்பர்ட் ஹென்றி, ஞானம்,17 வது மாமன்ற உறுப்பினர் பிரபாகரன்,  சீமான், இளையராஜா, அரியமங்கலம் கோட்ட தலைவர் ஜெயநிர்மலா பந்தல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.....
இறுதியாக 30 வது வட்ட செயலாளர் ஜெ.எட்வின் நன்றியுரை வழங்கினார்....


மேலும், 100 பள்ளி மாணவ மாணவிகளுக்கான நோட்டுப்புத்தகம் . பேனா, பென்சில் ஆகியவை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் விடுதலை சிறுத்தை கட்சியின் புதிய கொடி கம்பம் நடப்பட்டு அதில் புதிய கொடியை தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலாளர் பிரபாகரன் ஏற்றினார். 



Post a Comment

0 Comments