// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** SDPI கட்சி சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

SDPI கட்சி சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

SDPI கட்சி,திருச்சி வடக்கு மாவட்டம்,லால்குடி தொகுதியின்  சார்பாக  சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி வடக்கு மாவட்ட  தலைவர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது....

SDPI கட்சி இஃப்தார் நிகழ்ச்சியில் அனைத்து மதங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்..

இதில் மாவட்ட பொது செயலாளர் நியாமதுல்லா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் PFI ஏரியா செயலாளர் முகமது இக்பால்,லால்குடி நகராட்சி தலைவர் துரை மாணிக்கம்,துணை தலைவர் சுகுணா ராஜ்மோகன்,கவுன்சிலர் சர்மிளா சாகுல் ஹமீது,இலால்குடி விசிக ஒன்றிய பொருளாளர்  ஆங்கரை விக்டர்,அமமுக  நகர செயலாளர் ஜின்னா ஜாகிர் உசேன்.


இதில் சமூக நல்லிணக்க  நலன் விரும்பிகள்,அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments