BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடைகள் பார்களை அகற்ற கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடைகள் பார்களை அகற்ற கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் குறைந்த அளவில் இருக்க வேண்டுமெனவும் 500 மீட்டர் இடையே எந்த ஒரு மதுபான கடையும் இருக்ககூடாது என  உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது... 





இந்த தீர்ப்பை அலட்சியம் செய்யும் விதமாக பால்பண்ணை பகுதி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மதுபான பார் இயங்கி வருகிறது..அதே நெடுஞ்சாலை பகுதியில் அருகில்  SIT, அண்ணா வளைவு , துவாக்குடி ஆகிய பகுதிகளில் மதுபான கடைகள் பார்  வசதியுடன் இயங்கி வருகிறது.. 

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே அகற்ற கோரியும், இந்த டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளித்த டாஸ்மாக் மேலாளர் மீது ,தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உச்சநீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்த கோரியும் ஜனநாயக சமூக நலக்கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments