BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி தில்லைநகரில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு காபி கடையில் தீ விபத்து

திருச்சி தில்லைநகரில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு காபி கடையில் தீ விபத்து

திருச்சி தில்லைநகர்  சாலை ரோடு ஜெயந்தி பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே கும்பகோணம் ஐங்கரன் காபி கடை உள்ளது. இன்று மாலை திடீரென காபி கடையில் பயன்படுத்திய சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. 

லேசாக பற்றிய தீ மளமளவென கடை முன் பகுதியில் எரிய தொடங்கியது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தில்லைநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.

Post a Comment

0 Comments