கோவைக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி_வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஜவுளித்தொழிலின் நலன் காக்க கோரிக்கை மனு அளித்தனர்.
அருகில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ, மாவட்ட கழகச் செயலாளர் பி. ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ, அம்மன் கே.அர்ச்சுணன் எம்எல்ஏ,
கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ் எம்எல்ஏ, விபி.கந்தசாமி எம்எல்ஏ, இளைஞரணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ , மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொது செயலாளர் ஏபி. முருகானந்தம் உள்பட பலர் உள்ளனர்.
கோவை செய்தியாளர் கோபிநாத்
0 Comments