BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க வந்த பெண்களின் நகை திருட்டு

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க வந்த பெண்களின் நகை திருட்டு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்று காலை சுமார் 5மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து கொண்டிருக்கும் பொழுது  பெண்கள் அருவி பகுதியில் 7க்கும் மேற்பட்ட பெண்களின் நகைகள் திருடுபோய் உள்ளது..






இந்த தகவலை சம்பந்தபட்ட காவல் நிலையத்தை தொடர்புகொண்ட பொழுது சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் பெண் போலீசார் யாரும் இல்லை.. தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு 2மணி நேரம் தாமதமாக வந்ததால் சுற்றுலா பயணிகள் கோபம் அடைந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... இது போன்ற திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் வேதனை கொள்கின்றனர்.


தென்காசி செய்தியாளர் : கோபிநாத் 

Post a Comment

0 Comments