BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

மின்கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு,சட்டம் ஒழுங்கு சீர்கேடு,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து,திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.இ.அதிமுக சார்பில் வரும் 25ம்‌ தேதி காலை 10.00 மணி அளவில் முசிறியில்‌ நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது   குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


(1) 11-07-2022 திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக்குழுவில் கழக பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுசெயலாளராக முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக்கள், பாராட்டுகளை தெரிவிப்பதும்
(2) திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதும்


(3)  மின் கட்டண உயர்வு, சொத்து வரி , சட்டம் ஒழுங்கு சீர்கேடு,  தேர்தல் வாக்குறுதிகளை  திமுக அரசை கண்டித்து  25-07-2022 திங்கட்கிழமை முசிறி கைகாட்டி பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்து தீர்மானிக்கப்பட்டுள்ளது..

இதில்  அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி அவர்கள்,மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல் அவர்கள்,முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு(எ) சுப்ரமணியன் அவர்கள்,மாவட்ட இணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ டி.இந்திராகாந்தி அவர்கள்,மாநில எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் பொன்.செல்வராஜ் அவர்கள் 

மாவட்ட கழக பொருளாளர் சேவியர் மற்றும் ஒன்றிய,நகர,பகுதி,பேரூர் கழக செயலாளர்கள்,மாவட்ட சார்பு அணிச் செயலாளர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments