BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு

திருச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு

 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 


 இந்நிகழ்ச்சியினை பாப்புலர் ஃப்ரண்ட் திருவரம்பூர் பகுதி தலைவர் முகமது அலி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள் அதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் M. அப்சல் கான் வரவேற்புரை ஆற்றினார் மற்றும்  பாப்புலர் ஃப்ரண்ட் திருச்சி மண்டல தலைவர் A.அமீர் பாஷா அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்கள்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் I.சபியுல்லா வர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார். 


அவர் பேசுகையில்....பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு, சுதந்திரத்திற்காக போராடியவர்களையும், உயிர்த்தியாகம் செய்தவர்களையும் இந்நன்னாளில் நினைவு கூறுவோம்




மேலும் அன்று இந்தியர்கள் சுதந்திர காற்றை சுவாசித்து விடக்கூடாது என்பதற்காக   ஆங்கிலேயன் பல்வேறு அநியாங்களை  கட்டவிழ்த்து விட்டான். பெற்ற சுதந்திரத்தை இல்லாமல் ஆக்க  இன்று சங்பரிவாரக்கூட்டங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றது. உடைமைகள்  உயிர்களை இழக்கும் சூழல் வந்தாலும் அனைத்து விதமான அர்ப்பணிப்புகளுக்கும் தயாராகி பெற்ற  சுதந்திரத்தை பேணி  பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம். அனைவரும் ஓரணியில் ஒற்றுமையாக  செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்று கூறினார்



பாப்புலர் ஃப்ரண்ட்டின்  திருச்சி மாவட்ட செயலாளர் V. முஜிபுர் ரஹ்மான் சுதந்திர தின உறுதிமொழியை முன்மொழிய பொதுமக்கள் அனைவரும் சுதந்திரத்தை பேணிப்பாதுகாக்க உறுதிமொழி எடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் sdpi கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டபொதுச்செயலாளர்  தமிமுன் அன்சாரி, மாவட்ட துணைத் தலைவர் பிச்சைக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்


இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் கிழக்கு மாநகரப் பகுதி தலைவர் A.அப்துல்லா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்

     இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், sdpi  கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது

Post a Comment

0 Comments