பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை பாப்புலர் ஃப்ரண்ட் திருவரம்பூர் பகுதி தலைவர் முகமது அலி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள் அதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் M. அப்சல் கான் வரவேற்புரை ஆற்றினார் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் திருச்சி மண்டல தலைவர் A.அமீர் பாஷா அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் I.சபியுல்லா வர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் sdpi கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டபொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, மாவட்ட துணைத் தலைவர் பிச்சைக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் கிழக்கு மாநகரப் பகுதி தலைவர் A.அப்துல்லா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், sdpi கட்சிகள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது
0 Comments