BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** குஜராத் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து ஆல் இந்தியா இமாம் கவுன்சில் ஆர்ப்பாட்டம்

குஜராத் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து ஆல் இந்தியா இமாம் கவுன்சில் ஆர்ப்பாட்டம்

 ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால்  2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் இனப்படுகொலை கலவரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பல்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனவும் குற்றவாளிகளை மீண்டும் சிறையிலடைக்க வலியுறுத்தியும் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


மண்டல தலைவர் அப்துல் கபூர் மன்பஈ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ திருச்சி மண்டல தலைவர் ஹஸ்ஸான் பைஜி, இமாம் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் அர்சத் அஹமது அல்தாபி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். 





மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Post a Comment

0 Comments