BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்...! அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் அழைப்பு

மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்...! அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் அழைப்பு

 மின் கட்டண உயர்வு மற்றும் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வெள்ளிகிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது..திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி  வெளியிட்டுள்ள அறிக்கையில் 

 
முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவிப்பின்படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 16.9.2022 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மண்ணச்சநல்லூர் பெட்ரோல் பங்க் அருகில்  நடைபெற உள்ளது.

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது..

Post a Comment

0 Comments