வீரபாண்டியனை கொலை செய்ய முயன்றவர்களை கண்டித்தும், கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் !
ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம் .செல்வராஜ் உரை நிகழ்த்தினார். மேலும் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் க. சுரேஷ், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் அன்சர்தீன் மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் க.இப்ராகிம், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம்.செல்வகுமார், மாதர் சங்க தலைவர்கள் வை.புஷ்பம், க.ஆயிஷா, ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சத்யா, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் சூர்யா, கிழக்குப் பகுதி செயலாளர் சையத் அபுதாஹிர், அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜா லிங்கம், பொன்மலை பகுதி துணை செயலாளர் ராஜா, ஒன்றிய பொறுப்பாளர் முத்துலட்சுமி, ஸ்ரீரங்கம் பகுதி துணைச் செயலாளர் சந்தோஷ், அபிசேகபுரம் பகுதி குழு பொறுப்பாளர் சரவணன் மற்றும் மேற்கு பகுதிக்கு பொறுப்பாளர் ரவீந்திரன், ஆனந்தன், பாலமுரளி, இளைஞர் பெருமன்ற நிர்வாக விஸ்வா, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க நிர்வாகி மாக்சிம் கார்கி, மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாட்ஷா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments