திருச்சி தெற்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி SDPI கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் மர்சூக் தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, மாவட்ட செயலாளர்கள் மதர் Y.ஜமால் முகமது மற்றும் ஏர்போர்ட்.அப்துல் மஜீத், ஊடக அணி மண்டல தலைவர் KSA.ரியாஸ், மாவட்ட வர்த்தக அணி தலைவர் அப்துல் மாலிக், திருச்சி கிழக்கு தொகுதி செயலாளர் வரகனேரி காதர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்:
1. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் பெட்டவாய்த்தலை பேருந்து நிலையம் வரை நிழற்குடை இல்லாத அனைத்து நகர பேருந்து நிறுத்தங்களிலும் உடனடியாக நிழற்குடை அமைத்திட வேண்டும்.
3. பெட்டவாய்த்தலை ரயில் நிலையத்திற்குட்பட்ட காந்திபுரம் ரயில்வேகேட் பகுதியில் சுரங்கப்பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
4. பெட்டவாய்த்தலை மில்கேட் பகுதியில் செயல்படும் மூன்று அரசு மதுபானக் கடைகளை மக்களின் நலன் கருதி உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
பெட்டவாய்த்தலை கிளை செயலாளர் சாகுல் ஹமீது நன்றியுரை கூறினார்.
0 Comments