BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** SDPI கட்சி ஸ்ரீரங்கம் தொகுதி பொதுக்குழு கூட்டம்

SDPI கட்சி ஸ்ரீரங்கம் தொகுதி பொதுக்குழு கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி SDPI கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் மர்சூக் தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, மாவட்ட செயலாளர்கள் மதர் Y.ஜமால் முகமது மற்றும் ஏர்போர்ட்.அப்துல் மஜீத், ஊடக அணி மண்டல தலைவர் KSA.ரியாஸ், மாவட்ட வர்த்தக அணி தலைவர் அப்துல் மாலிக், திருச்சி கிழக்கு தொகுதி செயலாளர் வரகனேரி காதர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி, கிளை  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




இப்பொதுக்  குழுவில் பின்வரும் தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன:

தீர்மானங்கள்:

1. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் பெட்டவாய்த்தலை பேருந்து நிலையம் வரை நிழற்குடை இல்லாத  அனைத்து நகர பேருந்து  நிறுத்தங்களிலும் உடனடியாக நிழற்குடை அமைத்திட வேண்டும். 



2. ஸ்ரீரங்கம் தொகுதி இனாம் குளத்தூரில் உள்ள குளத்துக் கரையை மேம்படுத்தவும்,  பேருந்து நிலையம் அமைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும்




3. பெட்டவாய்த்தலை ரயில் நிலையத்திற்குட்பட்ட காந்திபுரம் ரயில்வேகேட் பகுதியில் சுரங்கப்பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். 

4. பெட்டவாய்த்தலை மில்கேட் பகுதியில்  செயல்படும் மூன்று அரசு மதுபானக் கடைகளை மக்களின் நலன் கருதி உடனே அப்புறப்படுத்த வேண்டும்.




5. மக்களின் நலன்கருதி பெட்டவாய்த்தலை கிளையின் சார்பாக மருத்துவ முகாம் நடத்துதல்.

பெட்டவாய்த்தலை கிளை செயலாளர் சாகுல் ஹமீது நன்றியுரை கூறினார்.


Post a Comment

0 Comments