BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** அஞ்சுமனே ஜமாத்தே இஸ்லாம் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் பிரச்சினை தொடர்பாக மனு

அஞ்சுமனே ஜமாத்தே இஸ்லாம் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் பிரச்சினை தொடர்பாக மனு

இஸ்லாமிய அமைப்புக்கு சொந்தமான இடம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தவறான புகார் - ஜனநாயக சமூக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேட்டி

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் அதில் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் மனு அளித்தார்.




அம்மனுவில் திருச்சி அரியமங்கலத்தில் 16வது வார்டு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் அஞ்சுமனே  ஹிமாயத்தோ இஸ்லாம் அறக்கட்டளைக்கு சொந்தமாக 5.45 ஏக்கர் நிலம் கடந்த 35 வருடங்களாக எந்தவித பயன்பாடு இன்றி கிடந்தது.  தற்பொழுது அந்த நிலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் விதமாக அறக்கட்டளை நிர்வாகிகள் கூடி ஆலோசனைக்கு  பின்னர் அந்த நிலத்தை நிலமற்ற ஏழை மக்களை கண்டறிந்து நபர் ஒருவருக்கு 540சதுர அடி என வாடகைக்கு பிரித்துக் கொடுத்து



அதன் மூலமாக வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த அறக்கட்டளை தன்னிச்சையாக இடத்தை விற்பதாக கூறி தனிப்பட்ட நபர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் கொடுத்துள்ளார்.  இந்த புகாரில் எந்த ஒரு உண்மையையும், முகாந்திரம் இல்லை எனவே மாவட்ட ஆட்சியர் இது தொடர்பான விசாரணையில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும்.  மேலும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம் மனுவில் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments