திருச்சியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மனும், மாணவரணிச் செயலாளருமான கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ. இந்திராகாந்தி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவரணி பேரூர் கண்ணதாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
0 Comments