திருச்சி மணப்பாறைபுத்தாநத்தம் கஸ்பா நல சங்கத்தின் சார்பாக ஜமாஅத் நிர்வாகளிடம் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புத்தாநத்தம் கஸ்பா நலச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. கொரோனா கால கட்டத்தில் பல்வேறு கட்டங்களாக உணவு பொருட்கள் மற்றும் பக்ரீத் காலங்களில் குர்பானி பணிகளை இந்த சங்கம் செய்து வந்தது. அந்த வகையில் புத்தாநத்தம் பகுதிக்கு சமூக பணிகளுக்கு ஆம்புலன்ஸ் தேவை என்று முடிவு செய்து புத்தாநத்தம் கஸ்பா நலச் சங்கம் சார்பில் தொழில்திபர்கள், வியாபாரிகள் பல்வேறு தன்வந்தவர்களிடம் வசூல் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டது.
இதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக புத்தாநத்தம் ஜமாஅத் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு அர்ப்பணிப்பு விழா வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அல்பி ஸகீரீன் உரிமையாளர் மவ்லவி ஆர். தாஹிர் இம்தாதி தலையை வகித்தார். விழாவில் புத்தாநத்தம் கஸ்பா நலச் சங்கத்தின் இணைச் செயலாளர் சீமாட்டி ரெடிமேட்ஸ் உரிமையாளர் முஹம்மது பாரூக் வந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.
பின்னர் புத்தாநத்தம் கஸ்பா நலச் நிர்வாகிகள் முன்னிலையில் புத்தாநத்தம் ஜமாஅத் நிர்வாகத்தினரும, ஒன்றிய கவுன்சிலருமான ரபீக் ராஜா மற்றும் நிர்வாகிகளிடம் நீடூர் ஜாமி ஆ மிஸ்பாஹுல் ஹூதா அரபிக் கல்லூரி முதல்வரும், புத்தாநத்தம் நகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவருமான மவ்லவி முஹம்மது இஸ்மாயில் பாஜில் பாகவி புதிய ஆம்புலன்ஸ் வண்டி சாவியை ஒப்படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மனாஸ்மு ஆதா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி அஹமது கபீர் பாகவி, துணை இமாம் மவ்லவி தாஹா ஹஜ்ரத், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.எம்.கே.எம். முஹம்மது இஸ்மாயில், புத்தாக்கம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள், தன்வந்தவர்கள், ஜமாஅத்தார்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
0 Comments