திருச்சி புத்தூர் நால் ரோட்டு பகுதியில் இன்று காலை பா.ஜ.க மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருச்சியில் புதிதாக உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மதுபான கேளிக்கை நடனத்திற்கு அனுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், தமிழக அரசையும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும், ஆபாசமாக பேசியும், காவல்துறை அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆபாசமாக பேசிய பா.ஜ.க கட்சியினர் மீது நடவடிக்கை வலியுறுத்தி 26 வது திமுக வட்ட செயலாளர் பவுல்ராஜ் தலைமையில் திமுக கட்சியினர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகிகளை கைது செய்து நடவடிக்கை வலியுறுத்தி வட்டச் செயலாளர் பவுல்ராஜ் தலைமையில் அரசு மருத்துவமனை எதிரில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறை துணை ஆணையர் அன்பு மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டு பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments