// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது

திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


திருவெறும்பூர் அருகே உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் தமிழரசன் (26)இவர் திருவெறும்பூர் பகுதியில் கஞ்சாவை 50 கிராம் அளவில் பாக்கெட்டுகளாக வைத்துக்கொண்டு விற்று உள்ளார்.



அப்போழுது அந்தப் பகுதியில் ரோந்து சென்ற திருவெறும்பூர் போலீசார் தமிழரசன் கஞ்சா பொட்டலம்  விற்ற பொழுது கையும் களவுமாக திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தமிழரசனிடம்  இருந்து 10 கஞ்சா பட்டுலகங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதன் எடை சுமார் 500 கிராம் இருக்கும் இதன் மதிப்பு ரூ 4000 ஆகும்

Post a Comment

0 Comments