NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி தேசிய கல்லூரியில் இளைஞர் தின விழா

திருச்சி தேசிய கல்லூரியில் இளைஞர் தின விழா

திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பிரசன்னபாலாஜி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் வாழ்த்துரை வழங்கினார். கரூர் பசுபதி பாளையத்தில் உள்ள இராமகிருஷ்ண மடத்தின் செயலர் சுவாமி சந்திரசேகரானந்தா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசிய இளைஞர் தின சிறப்புரை நிகழ்த்தினார். 


இன்றைய இளைஞர்கள் பாதை மாறி வாழ்க்கையைச் சீர்குலைத்துக் கொள்வதிலிருந்து விடுதலை பெறுவதற்கு விவேகானந்தரின் கருத்துக்களும் வழிகாட்டுதல்களுமே பெருந்துணையாக இருக்கும் என்று பேசினார் . 




நம்மை நோக்கி இருக்கிற சவால்களை எதிர்கொள்வதற்குத் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை ஆகியவற்றைத் தற்காப்பு ஆயுதங்களாகப் பயன்படுத்த வேண்டும் என்று உரையாற்றினார். இன்றைய மாணவர்களிடம் தன்னம்பிக்கையானது கொஞ்சம் கூடக் குறையக் கூடாது என்றும் விடாமுயற்சியின் பால் அவர்கள் தங்கள் சிந்தனைகளைப் பதிய வைக்க வேண்டும் என்றும் உரையாற்றினார். நிறைவாகஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் வசந்தன் அவர்கள் நன்றியுரை நல்கினார். 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள் தேசிய இளைஞர் தின விழாவில் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.


நிருபர் ரூபன்

Post a Comment

0 Comments