BREAKING NEWS *** ஈரான் அதிபர் மரணம் - பிரதமர் இரங்கல் *** சத்தியம் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

சத்தியம் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

சத்தியம் அறக்கட்டளையும் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பேரவையும் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இந்த சாலை பாதுகாப்பு வார விழிப்புணர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நுகர்வோர் பேரவை தலைவர் சிவசங்கர் சேகரன் தலைமை தாங்கினார் சத்தியம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அமாவாசை முன்னிலை வகித்தார். 


தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொருளாளர் முகமது சர்புதீன், மற்றும்  சிறப்பு அழைப்பாளராக முதன்மைப் போக்குவரத்து காப்பாளர் முருகையன், ராணா மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார், மேக்சி விஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை மருத்துவர் சிபு வர்க்கி ஆகியோர் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு வாசகங்களான சாலைகளில் அவசர பயணத்தை தவிப்பீர், சாலைகளில் வாகனங்களை வேகம் குறைத்தபடி இயக்க வேண்டும்..





பயணத்தின் போது அலைபேசியை உபயோகப்படுத்தக் கூடாது, சிக்னலை கவனித்து செல்ல வேண்டும், வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் அவசியம், ஹெல்மெட் அணிவதால் உயிர் சேதம் ஏற்படாது போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு அறிக்கையை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இந்த சாலை பாதுகாப்பு வார விழிப்புணர் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Post a Comment

0 Comments