BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு கொசுவலை போர்த்தும் போராட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு கொசுவலை போர்த்தும் போராட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு

கொசு தொல்லையால் அவதிப்படும்  திருச்சி மாநகராட்சி மக்களை காத்திட எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..

 இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முழுவதுமாக தற்போது கொசுத்தொல்லைகள் மிக வேகமாக பரவி வருகிறது. 

 

மேலும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஆங்காங்கே தேங்கி கிடக்கின்ற சாக்கடை மற்றும் குப்பைகளால் கொசு உற்பத்தியாகி அதனால் பொதுமக்களுக்கு டெங்கு போன்ற காய்ச்சல் மற்றும் வியாதிகள் பரவத் தொடங்கி இருக்கிறது.




எனவே திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மேயர் அவர்கள் இதனை உடனடியாக பரிசீலித்து கொசு மருந்து தெளிப்பது பாதாள சாக்கடை திட்டத்தால் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்ற குப்பைகள் சாக்கடை கழிவுகள் முறையாக அகற்றி சுகாதார முறையற்ற இருக்கின்ற திருச்சி மாநகராட்சி சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் துப்புரவு பணியாளர்களை கொண்டு சரி செய்து மாநகராட்சியின் தூய்மையும் மக்களினுடைய ஆரோக்கியத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்று எஸ் டி பி ஐ கட்சி திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கிறது.


மாநகராட்சி இதனை கண்டு கொள்ளாவிடில் கொசுவலை போர்த்தும் போராட்டம் மாநகராட்சி அலுவலகத்தின் முன்  நடைபெறும் என எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது 



Post a Comment

0 Comments