NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தெருமுனைக் கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தெருமுனைக் கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட பீமநகர் பகுதி சார்பில் பவள விழா தேசிய மாநாடு விளக்க தெருமுனை கூட்டம் கூனி பஜார் பகுதியில் மாவட்ட துணைத் தலைவர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. மேற்கு தொகுதி அமைப்பாளர் அப்துல் கபூர் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி பொருளாளர் சேக் முகமது கௌஸ், கிராத் ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார்.


மாவட்டச் செயலாளர் சையது ஹக்கீம், துணைச் செயலாளர் சாதிக்குல் அமீன் ஆகியோர் துவக்க உரையாற்றினார்,



சிறப்பு அழைப்பாளராக பொன்மலை கோட்டத் தலைவர் துர்காதேவி, மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, திமுக வட்டசெயலாளர் ரஹீம்,ஆகியோர் பங்கேற்றனர்


இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் மைதீன் அப்துல்காதர், மாவட்டத் துணைத் தலைவர் முப்தி உமர் பாரூக், ஆகியோர்  கருத்துரை வழங்கினார், நிறைவாக மாநில துணைச் செயலாளர் பாரூக் சிறப்புரையாற்றினார்



இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஹுமாயூன், அப்துல் கலீல்,ஜாஃபர்ஷெரீப், அப்துல் சலாம், ஷாஜகான், பைரோஸ், ஆரிஃபா,

ஆயிஷா, பீருனிஷா,

நியாஸ் அஹமத் மற்றும் வார்டு நிர்வாகிகள் பீர் முகம்மது, ஆரிப், கலீல், நூர் முகம்மது, ரஷிதா, ஜெயராணி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments