NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கம - சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு

திருச்சியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கம - சமூக ஆர்வலர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்ட மற்றும் மாநகர காவல் துறை சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது...இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், திருச்சி மாநகர தலைமையிடத்து துணை ஆணையர், திருச்சி மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர், சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், ஆகியோர் முன்னின்று கருத்தரங்கை சிறப்பாக நடத்தினர்.



இக்கருத்தரங்கில், மாநகர தலைமையிடத்து துணை ஆணையர் வரவேற்புரை ஆற்ற, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் சைபர் பிரிவு நிபுணர் திரு கார்த்திகேயன், NIT உதவி பேராசிரியர் திரு. கன்ஷியாம், HDFC வங்கியின் அதிகாரி திரு ராஜா சரவணன் ஆகியோர் சைபர் குற்றங்களின் தீவிரங்கள், தடுக்கும் வழிமுறைகள், பாதுகாப்பாக கைபேசி மற்றும் கணினியை கையாள்வது எப்படி என்று உரையாற்றினர். நிறைவாக, திருச்சி மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் திரு பால் வண்ண நாதன் நன்றி கூறினார்.




இக்கருத்தரங்கில் தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் பால்குணா லோகநாத், காமகோடி சுந்தர், ஆர் கே ராஜா, கோவிந்தராஜ், ஐயாரப்பன், பாத்திமா கண்ணன், ராஜசேகரன், பிளட் ஷாம், சகுந்தலா சீனிவாசன், ரூபிணி, எட்மன்ட் வில்லியம் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Post a Comment

0 Comments